Friday, August 10, 2012

அய்ம்பது ஆண்டுகள் "விடுதலை" ஆசிரியர் பணி !

நன்றி எதிர் பார்க்காதத் தொண்டு !!



உழைப்பாய் உருவெடுத்த உன்னதப் பண்பாளா
உன்னால் உயர்வுற்றோர் பிந்நாளில் தாக்கிடுவார்
உண்மை உணர்ந்திட்ட வாலிகளும் போற்றிடுவார்
வாழ்த்தும் வசையும் ஒன்றாய்க் கருதிடுவாய்
கருத்தில் கணினியாய் காலம் கணித்திடவே
பெரியாரின் மதியாய் செயல் படும் மாமனிதா
உன் தொண்டு தொடரட்டும் இனமானம் பெருகட்டும்.

Tuesday, June 16, 2009

பகுத்தறிவு: சுவாமி விவேகான‌ந்த‌ரின் பொன்மொழிக‌ள்!

பகுத்தறிவு: சுவாமி விவேகான‌ந்த‌ரின் பொன்மொழிக‌ள்!

விவேகானந்தர் சொன்ன உண்மைகளைச் சொல்லுங்கள்.சென்னையிலே விவேகானந்தர் வேதம் பற்றிப் பேசிய போது,"பிராமணர்கள் தான் வேதம் பற்றிப் பேசலாம்,நீ பிராமணனல்ல,வேதம் பேசக் கூடாது" என்று சொன்னார்கள் தெரியுமா?
அதற்கு அவர் சொன்ன பதில் தெரியுமா?
இங்குள்ள உங்களைப் போட்டிக்கு அழைக்கிறேன்,என்னுடன் வேதம் பேச யார் வெருகிறீர்கள் என்று கேட்டதும் அடங்கிப் போனது தெரியுமா?
விவேகானந்தர் காண விரும்பிய மாற்றங்களை இந்து மதத் தலைவர்கள் விட்டார்களா?
பிராமணர்களைப் பற்றிப் பெரியாரைவிடக் கேவலமாக விவேகானந்தர் சொன்னதைக் கொஞ்சம் சொல்லக் கூடாதா?
விவேகானந்தரையே மூடி மறைக்கிறீர்களே,ஏன்?
அவர் சொன்னதைச் செயல் படுத்தினால் எவ்வளவோ நல்லது நடக்குமே,செய்ய வேண்டியது தானே.

Friday, June 29, 2007

நரசிம்மனும் சோமாரியும் 1

சோமாரி:என்னங்காணும் உடாமெ,நன்னா பொய்யா சொல்லிண்டு வர்ரேளே!பொறுக்குமா?
நர:உமக்குப் போய் உடம்பெல்லாம் மூளைன்னு சொல்றாளே!தலையைத் தடவிக் கொள்ளும்!நாம சொல்றதுதான் உண்மைன்னு நம்ப வச்சிட்டோம்னா என்ன வேண்டும்னாலும் சொல்லலாம்.
சோ:உமக்கென்ன ஓய்!விளம்பரத்திலே வர்ர வரும்படியே போதும்.பேப்பரை ஓசியிலேயேக் கொடுக்கலாம்.
நர:யோவ்,மூளை!இது பண விஷ்யமாங்கணும்?தமிழ் ஈழம்னு வந்துட்டா அப்புறம் என்ன ஆகும் தெரியுமா?
சோ:வந்துடும் போல்த்தானே தோண்றுது?உலகமே ஒத்துண்டு போகுதே!
நர:வந்தாலும் இந்தியா அதற்கு எதிரா இருக்கணும்னு தானே ஓய் இதெல்லாம் செய்யுறோம்.
சோ:நேக்கு ஒன்னும் புரியல்ல ஓய்.இன்னும் எவ்வளவு நாள்தான் இப்படி,அவா சோத்தயே திண்ணுண்டு அவாளையே கிண்டல் பண்ணீட்டு இருக்க முடியும்?
நர:நோக்கு என்ன ஆயிடுத்து.ஒன்னுங் கவலைப் படாதே ஓய்!இப்பவே ரவி சங்கரை நன்னத் தயார் செய்துண்டு இருக்கோந்தானே!
சோ:என்ன இரு்ந்தாலும் சுவாமிகள் போல வருமா?
நர:சுப்ரீம் கோர்ட் இருக்க வரை கவலை இல்ல்ங்காணும்.பாத்துடுவோம்.
சோ:பப்ளிக் கொஞ்சம் மற்ந்துண்டு இருக்கா!கேசு நடந்தா எல்லாம் திரும்பி வருமோன்னா!
நர:நடந்தா தானே!

பெரியாரிடம் கேள்விகள்-1

பெரியாரிடம் கேட்கப்பட்டச் சில் கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்....


நீங்கள் கடவுள் இல்லை என்பதை மட்டும் சொல்லாதீர்கள்,நாங்களும் உங்களுடன் சேர்ந்து உழைக்கின்றோம்.
பெரியார்: அடப் போங்கைய்யா! எல்லாப் பயல்களும் கடைசியாக ஒளிந்து கொள்வது அங்கேதான்.அதைத்தான் முதலில் ஒழிக்கணும்.இல்லேன்னா என்னையேக் கடவுளாக்கித் தேங்காய் உடைக்க ஆரம்பிச்சுடுவாங்க.
கடவுள் இல்லை,இல்லை என்கிறீர்களே,கடவுள் நேரே வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
பெரியார்:இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போகிறோம்.இவ்வளவு அக்கிரமும்,அநியாயமும் அவர் பேராலாயே ந்டக்குது.இன்னும் எதுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்?
பெண்ணுரிமை,பெண்ணுரிமை என்கிறீர்களே,என்ன உரிமைதான் அவர்களுக்கு வேண்டும்?
பெரியார்:ஒன்னும் அதிகமாக வேண்டாங்க,ஆண்களுக்கு என்னென்னெ உரிமைகள் இருக்கிறதோ அதெல்லாம் பெண்களுக்கும் இருந்தால் போதுங்க!
இந்துக் கடவுள்களை ஏன் இப்படி எதிர்க்கிறீர்கள்?
பெரியார்:சிந்தித்துப் பாருங்கள்.இந்தக் கடவுள்கள் கையிலே ஆய்தம் இல்லாதவன் உண்டா?எவ்வளவு அசிங்கமான்க் கதைகள் ஒவ்வொருத்தருக்கும்.நாங்களா இதையெல்லாம் எழுதினோம்?வால்மீஹி ராமனப்பத்தி என்னெல்லாம் எழுதி யிருக்கிறார்?ஒரு கடவுளாவது யோக்கியமானக் கடவுளா?இந்தியன் பீனல் கோடு படி பாத்தா அத்தனைக் கடவுள்,கடவுளச்சி,ரிஷிகள் எல்லாம் ஜெயில்லேல்ல இருக்கணும்.
நீங்கள் இரண்டு முறை முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று மறுத்து விட்டீர்களே?
பெரியார்:பதவீன்னு போய்விட்டாலே கண்டவுங்க சொல்றதை க் கேட்கணும்.ஓட்டுக்காக ப் பொய்சொல்லனும்,வேசம் போடனும்.அரசியல்னு போய்விட்டாலே அயோக்யத்தனத்துக்குத் தயார்னுதான் அர்த்தம்.மக்கள் எண்ணங்கள் மாறனும்னா நிறைய விஷ்யங்கள் அவர்களுக்குப் பிடிக்காததை,உண்மையைச் சொல்லனும்.அரசியல்ல போய் அதச்சொன்னா ஒரு பயலும் ஓட்டுப் போடமாட்டன்.கல்லால தான் அடிப்பான்.
நீங்கள் இந்த வயதிலே திருமணம் செய்து கொள்ளலாமா?
பெரியார்:நம்ம நாட்டுச் சட்ட திட்டப்படி திருமணம்னு ஆனால்தான் சொத்து பத்தெல்லாம் பற்றி உரிமை இருக்கு.சட்டத்துக்காக செய்து கொண்ட ஏற்பாடு.உடல் உறவுக்காக அல்ல,அதற்காகத் திருமணம் செய்து கொள்ள வேஎண்டிய அவசிய்மும் இல்லை.தோழர்.மணி அவர்கள் வயது வந்தவர்,சிந்திக்கத் தெரிந்தவர்.அவர் முழுச் சம்மதத்துடன் தான் நடந்தது.
இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?
பெரியார்:முதல்லெ நல்லாப் படிக்க வேண்டும்.நான் படித்தவன் என்கிறமாதிரி நடந்து கொள்ள வேண்டும்.நம்மைப் பார்த்து நாலு பேர் நல்லதை கத்துக் கொள்ள வேண்டும் என்று இருக்க வேண்டும்.பணம் செய்யத்தான் படிப்பு என்றால் அது படிப்பு இல்லை.என்னைப் போல்ப் படிக்காதவர்கள் நிறையப் பேர் நிறையப் பணம் பன்னீருக்கோம்.மனிதர்கள் அனைவரும் சமம்.மூட நம்பிக்கையால் அநாவசிய்ச் செலவும் தொந்தரவுந்தான்,மூட நம்பிக்கையை ஒழிகோணும்.மக்களுக்கு நல்லதைச் சொல்லனும்,நல்லதைச் செய்யனும்,எல்லோரும் மகிழ்ச்சியாக நீண்ட நாள் வாழனும்.

Wednesday, May 2, 2007

Saturday, December 23, 2006

பெரியார்-புரிந்துகொள்ளவும்

"தனக்கென்று மனிதன் ஏதாவது தேடிக்கொள்வதென்றால்,அது தான் இறந்த பின்னும் தன்னைப் பற்றி மக்கள் நினைத்துக் கொண்டிருக்கவும் புகழும்படியாகவும் ஏதாவது காரியம் செய்துவிட்டுப் போவது எனபது தான்." விடுதலை 10-9-1953.
"நான் எனக்குத் தோன்றிய, என்க்குச் சரியெனப் படுகின்ற கருத்துக்களை மறைக்காமல் அப்படியேசொல்லுகின்றேன்.இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம்.சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம்.சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல" விடுதலை 15-7-1968.
ஒரு செல்வ மதவாதக் குடும்பத்தில் பிற்ந்து,பல மதத்தலைவர்களிடம் கேள்விகள் கேட்டு வள்ர்ந்தார்.காசிக்குச் சாமியாராக வேண்டும் என்று சென்று அங்கே நடக்கும் அநியாய்ங்களை நேரிலேக் கண்டு திரும்பினார்.பெரிய தொழிலதிபராகவும் முனிசிபல் சேர்மனாகவும் இருந்தார்.தமது நண்பர் ராஜாஜி சொன்ன்்தற்காக 29 பதவிகளைத் துறந்து காங்கிரசில் சேர்ந்து க் கடுமையாக உழைத்தார். தலைவராக்கப் பட்டார்.அங்கே சாதி வெறி தாண்டவமாடுவதைப் பார்த்து மாற்ற முய்ன்றார்.மகத்மா காந்தி போன்றோரே அதைத் தடுக்கத் தடையாக இருந்ததால் காங்கிரசை விட்டு வெளியேறினார்.
மனித நேயமே நல்ல கொள்கை என்பதைப் பல நாடுகட்குச் சென்று க்ண்டறிந்தார்.சாதி மதம் வேதம் புராணம் என்ற புரட்டுக்கள் கடைசியாக சாமி,கடவுளிடம் ஒளிந்து கொள்வதாலும்,கடவு்ளே மனிதனால் உண்டாக்கப் பட்டு பலரின் பொய் புரட்டுக்கு அடிமையாகி விட்டதாலும் நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் வ்ந்தவர்கள் வாருங்கள் என்று தனது கருத்துக்களை நேரே மக்களிடம் துணிவுடன் சொன்னார்.
இவர் கருத்துக்கள் அன்றும் இன்றும் வேண்டுமென்றே பத்திரிக்கை பலத்தால் இருட்டடிக்கப் பட்டன,திரித்துக் கூறப் பட்டன.
ஆகவே யானைப் பார்த்தக் குருடர்கள் போல்ப் பேசப்படுகிறார்.
மனிதர் முக்கியமாகப் பெண்கள் தங்கள் மூளைகட்குப் போடப்பட்ட விளங்குகளிலிருந்து வீடுதலை அடைந்து நல்ல மகிழ்வான வாழ்க்கை அனைவரும் சமமாக,பகுத்தறிவான முறையில் வாழ வேண்டும் என்பதே இவரது வேண்டுகோள்.
மூட நம்பிக்கைகளாள் பொருள் நேரம் வீணடிக்கப் படுகிறது என்றார்.
24-12-1973ல் உடலால் மறைந்தார்.கொள்கை மனிதநேயமாக வாழும்.
காட்டமான்க் கருத்துக்கள்-கண்ணியமாகச் சொன்னார்.நினைவு நாளில் பல நல்ல உள்ள்ங்கள் வாழ்த்தும்.